ஓமன் கடலில் தழைகீழாக கவிழ்ந்த எண்ணெய்க் கப்பல் !

ஓமன் கடலில் தழைகீழாக கவிழ்ந்த எண்ணெய்க் கப்பல் !

ஓமன்

ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் தழைகீழக கவிழ்ந்து அதன் பணியாளர்கள் 16 பேர் மாயமாகி உள்ளனர். இதில் 13 பேர் இந்தியர்கள். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஓமன் நாட்டில் கடல் பகுதியில் கவிழ்ந்த கப்பல் மூழ்கி விட்டதாகவும் இந்த கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 13 பேர் மற்றும் இலங்கை சேர்ந்த மூன்று பேர் என்ன மொத்தம் 16 ஊழியர்கள் இருந்ததாகவும் இந்த கப்பல் தலைகீழாக கவிழ்ந்து இருக்கும் நிலையில் அதில் இருந்த எண்ணெய் கசிவு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது

திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags

Next Story