வங்களாதேசம் வன்முறை ; 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு ரத்து - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !!

வங்களாதேசம் வன்முறை ; 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு ரத்து - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !!

சுப்ரீம் கோர்ட் 

வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்ற உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் காரணமாக கடந்த 2018 இல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் பாரபட்சமாக இருக்கிறது என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் அமைதிப் போராட்டத்தினை நடத்தி வந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி டாக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களும் போலீசாரம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட பலர் பலியாகினர். இதனையடுத்து நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.

இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவார். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இனிய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் கவனம் செலுத்தி வந்தது. இதனிடையே வங்காள தேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச்சாவடிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

வங்காள தேசத்தில் 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறை அமைச்சகம் நேற்று முன் தினம் தெரிவித்துள்ளது. வங்காள தேசத்தில் கல்வி பயின்று வந்த தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த 120 மாணவர்கள் அங்கிருந்து திரும்பி உள்ளதாக அசாம் அரசு நேற்று அறிவித்தது. திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் வழியாக கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 379 மாணவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு காரணமான 30 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சி அடையும் தகுதியான நபர்களுக்கு 93 சதவிகிதமும் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். மீதி உள்ள இரண்டு சதவிகிதம் சிறுபான்மையூர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்புநிலை திரும்பும் என்று தெரிவிக்கின்றன.

Tags

Next Story