சியா விதைகள் கலந்த மோரின் பயன்கள் !!!

சியா விதைகள் கலந்த மோரின் பயன்கள் !!!

சியா விதை

சியா விதைகள் கலந்த மோர், உங்களுக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிப்பது மட்டுமல்லாமல் உடல் வலிமையையும் தருகிறது. இது கோடை காலத்திற்கான சிறந்த பானமாக இருக்கும். கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் அதே வேளையில், ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும், சில உணவுகளில் மோர் முதலிடம் பிடிக்கிறது. அதிலும், சில உணவௌ பொருட்களை அதனுடன் சேர்க்கும் போது, வியக்க வைக்கும் பலன்களை பெறலாம்.1. செரிமானம் மேம்படும்: அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நன்கு சுத்தம் செய்கிறது. மோரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலை ஆரோக்கியமாக்கும்.சியா விதைகள் கலந்த மோர் மிகச் சிறந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பலன் தெரியும்.2. நீர்சத்தை அள்ளி வழங்கும்: இந்த மோர் உங்கள் உடலின் திரவ சமநிலையை பராமரிக்கிறது. இது உங்களுக்கு ஆற்றலையும் அள்ளித் தருகிறது.3. எலும்புகள் ஆரோக்கியம்: வலுவான எலும்புகளுக்கு கால்சியம் சத்து அவசியம். சியா விதைகள் மோர் கால்சியத்தின் நிறைந்துள்ளது. சியா விதைகள் மற்றும் மோர் பானத்தை தினசரி அருந்துவது எலும்புகளை பலப்படுத்துகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.4. நினைவாற்றல்: சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தை மேம்படுத்துகிறது. இந்த மோர் உங்கள் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தி, கவனச் சிதறல் ஏற்படாமல் பாதுகாத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 5. இதயம் ஆரோக்கியம்: ஆரோக்கியமான இந்த சூப்பர் மோர் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது.6. எடை இழப்புக்கான சிறந்த பானம்: உடல் எடையை சட்டென்று குறைக்க விரும்பினால், சியா விதைகளால் கலந்த மோர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு சூப்பர்ஃபுட்களும் அதிக நார்ச்சத்து நிறைந்தவை. உங்களுக்கு வயிறு நிறைந்த உனர்வைத் தரும்.

Tags

Next Story