தென்னாப்பிரிக்காவில் மீண்டும் அதிபரானார் சிரில் ரமபோசா!

தென்னாப்பிரிக்காவில் மீண்டும் அதிபரானார் சிரில் ரமபோசா!

சிரில் ரமபோசா

தென்னாப்பிரிக்காவில் கூட்டணி ஆட்சியை அமைத்து சிரில் ரமபோசா மீண்டும் அதிபரானார்.

சிரில் ரமபோசாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, கடந்த மாதம் நடந்த பொதுத் தேர்தலில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக பெரும்பான்மையை இழந்தது.

மொத்தமுள்ள 400 இடங்களில் வெறும் 159 இடங்களில் மட்டுமே வென்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்(ANC), ஜனநாயக கூட்டணிக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி சட்டம் நீக்கப்பட்டப் பிறகு, முதன் முதலாக அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை அடிப்படையில் கடந்த 1994-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் தொடங்கி 30 ஆண்டுகாலமாக ANC கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது.

Tags

Next Story