வன்முறை போராட்டத்தின் பலி எண்ணிக்கை 32 -ஆக உயர்வு ; வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை !!

வன்முறை போராட்டத்தின் பலி எண்ணிக்கை 32 -ஆக உயர்வு ; வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை !!

வன்முறை

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படைவீரர் இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆளும் கட்சியின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்தவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் ஆறு மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாக்கியது. போலீசார் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பல்கலைக்கழகம் மட்டும் இல்லாமல் டாக்காவில் உள்ள மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றது.

டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சி தலைமையகம் வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் BTV அலுவலகத்தில் நின்றிருந்த வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிடத்திற்குள்ளேயே பலர் சிக்கினார். இதனை தொடர்ந்து அவர்களை பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக அந்த நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்நாடு பல்வேறு நகரங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளையும் ஒலி எழுப்பும் கிரானைட்களையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.

அந்த நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய சேவைகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க இந்திய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

Tags

Next Story