பூமியின் துருவங்கள் ஆய்வு - நாசா மேற்கொள்ளும் புதிய திட்டம் !!!

பூமியின் துருவங்கள் ஆய்வு - நாசா மேற்கொள்ளும் புதிய திட்டம் !!!

நாசா 

புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி பூமி துருவங்களை ஆய்வு செய்ய நாசா புதிய திட்டம் ஒன்றை திட்டமிட்டுள்ளது. பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இயல்பை ஆய்வு மேற்கொள்வதற்கும் மாறிவரும் காலநிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்ட துருவப் பகுதிகளுக்கான ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவை ஆய்வு செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்காக இரண்டு நவீன ரக செயற்கைக்கோள்களை இந்த மாதம் இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்பட்டு துருவப் பகுதிகளின் மேல் உள்ள புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

காலநிலை மற்றும் பணி மாதிரிகளை ஆராயும் வகையில் விஞ்ஞானிகள் அந்த தகவலை பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் உலகின் கடல் நீர் மட்டம் உயர்வு வானிலை மாற்றம் மற்றும் பனிக்கட்டிகள் உருகுதல் எத்தகைய விளைவுகளை அளிக்கக்கூடும் என்பதற்கான கணிப்புகளை அவர்கள் பெற உள்ளன

Tags

Next Story