இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

துப்பாக்கி சூடு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருகின்றனர்

இந்நிலையில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரதான சாலையில் அதிகாலை ஏழு முப்பது மணிக்கு போக்குவரத்து குறைவாக இருக்கும் போது சோதனை தடுப்புக்கு அருகில் சென்ற கார்களை நோக்கி மூவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிர் இழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன நகரமான வெட்ல கேம் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பது தகவலில் தெரியவந்துள்ளது.

Tags

Next Story