ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மாஸ்கோவில் துப்பாக்கிச் சூடு!

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மாஸ்கோவில் துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூடு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 22ம் தேதி இரவு இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 137 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரஷ்ய காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரமாக தங்கள் இடங்களுக்கு திரும்பிவிட்டனர் எனவும் கூறியிருந்தனர். இதனையடுத்து இவர்களை ரஷ்ய காவல்துறை, உளவுத்துறை ஆகியவை தேடி தாக்குதல் தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கிறது.


Tags

Next Story