முதன் முதலில் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜோ பைடன் !!

முதன் முதலில் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜோ பைடன் !!

ஜோ பைடன்

அமெரிக்கா அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முன்மொழிவதாகவும் அவருக்கு முழு ஆதரவு கொடுப்பேன் என ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அதிபர் தேர்தலில் விலகிய பிறகு நேற்று முதல் முறையாக தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது; ஆபத்தில் இருக்கும் நமது ஜனநாயகத்தை பாதுகாப்பது பெரிய பதவிகளை விட மிக முக்கியமான ஒன்றாகும். புதிய தலைமுறையிடம் ஜோதியை வழங்குவது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

இதுதான் நம் நாட்டை ஒருங்கிணைக்கும் தலைசிறந்த வழி அடுத்த ஆறு மாத காலம் அதிபராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் முழு கவனம் செலுத்துவேன் என கூறியுள்ளார்.

Tags

Next Story