மோடி பிரதமராக போவதில்லை.. அவரை நம்ப வேண்டாம் - ராகுல் காந்தி பேச்சு !

மோடி பிரதமராக போவதில்லை.. அவரை நம்ப வேண்டாம் - ராகுல் காந்தி பேச்சு !

ராகுல் காந்தி பேச்சு 

நாடாளுமன்ற தேர்தலுக்காக உ.பி-யில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

கன்னோஜ் தொகுதியில் மே13-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

அப்போது பேசிய அவர், ''பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக போவதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் ஈடுபடுவார்கள்.

இந்தியா கூட்டணியில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸும் சமாஜவாதி கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. நாட்டிலும், உ.பி.,யிலும் பா.ஜ., படுதோல்வி அடையப் போகிறது. இந்தியா கூட்டணி புயல் உத்தரப்பிரதேசத்துக்கும் வந்துவிட்டது. மாநிலத்தின் மிக மோசமான தோல்வியை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கப் போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் அதானி, அம்பானியின் பெயரை உச்சரிக்காத பிரதமர் மோடி தற்போது அவரது நண்பர்களின் பெயரை பயன்படுத்த துவங்கி உள்ளார். யாரும் கவனத்தை சிதற விட வேண்டாம்.'' என பேசியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story