நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா..

நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமா..

பிரதமர்

சமீப காலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திரா யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. நேபாளத்தில் பிரதமர் புஷ்பக் கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி ஜே.எஸ்.பி என கட்சியின் உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது.

கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான உபேந்திரா யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினார். பின்னர் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தனர்.

தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கி விட்டு புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. சமீப காலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திரா யாதவ் இடையே விரிசல ஏற்பட்டது.

இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசாந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் என்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பிரசன்டா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திலிருந்தும் வெளியேறினார்.

யாதவ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் இன்று காலையில் வழங்கினார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

ஜே.எஸ்.பி.-நேபாள் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் இருந்தனர். கட்சி உடைந்தபின் எம்.பி.க்கள் பலம் 5 ஆக குறைந்தது. அசோக் ராய் மற்றும் 6 எம்.பி.க்கள் மற்றும் 30மத்தியக் குழு உறுப்பினர்கள் புதிய கட்சியில் உள்ளனர்.

உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசண்டா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும், இப்போதைக்கு கூட்டணி ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.

275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்றம்) மெஜாரிட்டிக்கு 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யு.எம்.எல்.)- 77, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்)-32, ராஷ்டிரிய சுதந்திர கட்சி-21, புதிதாக ஆரம்பிங்கப்பட்ட ஜனதா சமாஜ்பதி கட்சி-7, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்)-10 ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 147 உறுப்பினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story