நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்! பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு..!!

நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்! பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு..!!

விபத்து

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 19 பேருடன் சென்ற இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், முதற்கட்டமாக ஐந்து பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் 13 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் உயிருடன் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story