சமூக வலைத்தளத்தில் பாலியல் தொல்லை - ஒரு வருடத்தில் 300 -பில்லியன் பெண் குழந்தைகள் பாதிப்பு !!

சமூக வலைத்தளத்தில் பாலியல் தொல்லை - ஒரு வருடத்தில் 300 -பில்லியன் பெண் குழந்தைகள் பாதிப்பு !!

குழந்தைகள் பாதிப்பு

உலக அளவில் ஒரு வருட காலத்தில் 300 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளின் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல் செய்தல், பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்தல், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்களை AIதொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக் மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் என எண்ணிலடங்கா குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேற தொடங்கியுள்ளன.

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர் சிறுமிகளை ஏமாற்றுகிறார். உலகம் முழுவதும் இந்த வகை குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முக்கியமாக உலகின் ராட்சத பொருளாதரத்தை கொண்ட நாடான அமெரிக்காவில் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலக அளவியல் தொற்று நோயாக பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story