அமலாக்கத்துறைக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன் - ராகுல்காந்தி

அமலாக்கத்துறைக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன் - ராகுல்காந்தி

ராகுல்காந்தி

தன் மீது சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது 21ஆம் நூற்றாண்டில் இந்த நாடு பா.ஜ.க.வின் சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக ராகுல்காந்தி பேசி இருந்தார்.

சக்கர வியூகத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அம்பானி, அதானி ஆகியோர் நாட்டை கட்டுப்படுத்துவதாகவும் ராகுல் குற்றம்சாட்டி இருந்தார்.

நான் குறிப்பிட்ட 2 பேரில் ஒருவர் சக்கர வியூகம் குறித்த என் பேச்சை விரும்பவில்லை. என் மீது சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக அந்த அமைப்பில் உள்ள சிலர் என்னிடம் கூறி உள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story