ரயில்வே -யில் ATVM பயணச்சீட்டு விற்பனை உதவியாளர் பணி... வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

Update: 2024-05-31 07:00 GMT

வேலைவாய்ப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக பயணச்சீட்டு விற்பனை செய்து தரும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இதுவரை இப்பணியிடங்கள் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி இயந்திரம் (ATVM) மூலம் ஒரு உதவியாளர் விற்பனை செய்யும் பயணச் சீட்டுகளின் மொத்த மதிப்பில் 3 சதவீதத் தொகை அவருக்கு வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்பையில் பணியமர்த்தப்படுவர்.

திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேசுவரம், ராமநாதபுரம், மானாமதுரை, கல்லிடைக்குறிச்சி, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, போடிநாயக்கனூர், புனலூர் ஆகிய 18 ரயில் நிலையங்களில் இருக்கும் தானியங்கி இயந்திரங்களில் பயணச்சீட்டு விற்பனை செய்ய உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, ஜூன் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags:    

Similar News