மேக்காமண்டபம் அருகே இருதரப்பினர் மோதல்: திமுக கவுன்சிலர் மீது வழக்கு

மேக்காமண்டபம் அருகே கடையில் பொருட்கள் விற்பது தொடர்பாக இரு தரப்பினர் மோதல் சம்பவத்தில் திமுக கவுன்சிலர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-23 14:21 GMT

காவல் நிலையம்

குமரி மாவட்டம் தக்கலை முட்டைக்காடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.. இதன் அருகே சிறிய கடை நடத்தி வருபவர் ராதாகிருஷ்ணன். இவரது கடையில் அருமநல்லூர் வீரவநல்லூர் சுடர்நகரைச் சேர்ந்த ஜோசப் வேலை பார்த்து வருகிறார்.இந்தக் கடை அருகே பார் நடத்தி வருபவர் ஷாஜி.

இவர் குமாரபுரம் பேரூராட்சி தி.மு.க. கவுன் சிலராகவும், குமாரபுரம் பேரூர் தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவர்களுக்கிடையே முன்விரோத தகராறு உள்ளது.இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோசப், மேக்கா மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஷாஜி வந்துள்ளார். அவர், தரக்குறைவாக பேசியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டதாக கொற்றிகோடு போலீசில் ஜோசப் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் தாக்குதலில் காயம் அடைந்ததாக தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.இதேபோல் ஷாஜி கொடுத்துள்ள புகாரில் ராதா கிருஷ்ணன் தரக்குறைவாக பேசி தாக்குதலில் ஈடுபட்ட தாக தெரிவித்துள்ளார். இந்த புகார்கள் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலர் ஷாஜி உள்பட 2 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News