உணவு டெலிவரி செய்வதுபோல் கைவரிசை

Update: 2024-09-03 06:01 GMT

உணவு டெலிவரி செய்வதுபோல் கைவரிசை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை : உணவு டெலிவரி செய்வதுபோல் கைவரிசை

உணவு டெலிவரி செய்வதுபோல் நகை பணம் கொள்ளை : பட்டப் பகலில் அதிர்ச்சி

மதுரவாயல் அருகே பட்டப்பகலில் உணவு டெலிவரி செய்வதுபோல் வீடு புகுந்து நகை பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி கவிதா. குமரன் மினி லோடு வேன் போட்டி வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட, கவிதா பள்ளி நேரம் முடிந்து பிள்ளைகளை அழைத்து வர சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உடனடியாக மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது உணவு டெலிவரி செய்வது போல் வரும் ஒரு நபர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும் பின்னர் திருடப்பட்ட பொருட்களுடன் தப்பிச் செல்வதும் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் 15 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, 6000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபரின் இருசக்கர வாகன எண்ணை கொண்டு அவரைத் தேடி வருகின்றனர். பகல் நேரத்தில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News