நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

நாகை மாவட்டத்தில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-23 13:57 GMT

நாகை மாவட்டத்தில் ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பரிந்துரையின் படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கிஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரவிச்சந்திரன் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தெற்கு பொய்கைநல்லூர் வடக்கு தெரு சந்திரகாசன் மன் நடைவண்டி மோகன் என்கிற மகேஸ்வரன் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். .

Tags:    

Similar News