புகையிலை பொருட்கள்  விற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள்  விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-22 04:33 GMT

குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள்  விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் புகையிலைபொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. குணசேகரன், ஏட்டு ராம்குமார் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் ஆனங்கூர் சாலை, ஆலாங்காட்டுவலசு பகுதியில் உள்ள துரைசாமி, 70,  மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக அறிந்து, நேரில் சென்று கையும், களவுமாக பிடித்தனர். துரைசாமியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஆயிரத்து, 185 ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News