ஆம்பூர் : ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

ஆம்பூர் அருகே ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது, வேலூர் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை

Update: 2023-12-12 10:22 GMT

 கஞ்சா கடத்திய 3 பேர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, பின்னர் தகவலின் பேரில் வேலூர் மத்திய நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்க்கொண்டனர், அப்பொழுது ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை மேற்க்கொண்ட போது, அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது, உடனடியாக அவர்களை கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிகாஸ் குமார், அமித் குண்டு, பிகாஸ் நாயக், என்பதும், மேற்கு வங்க மாநிலத்தலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கஞ்சாவை வாணியம்பாடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News