தக்கலை அருகே மதுபாரில் ஏற்பட்ட தகராறு: தொழிலாளிக்கு வெட்டு

தக்கலை அருகே மதுபாரில் மோதலில் தொழிலாளிக்கு வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-30 09:50 GMT

காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு வடக்காவிளையை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். கூலி தொழி லாளி. காஞ்சிரக்கோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் சுஜின்குமார். இவர்கள் இருவருக்கம் பாரில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்தது.

சம்பவத்தன்று பாரில் ஏற்பட்ட வாக்குவா தத்தில் சவுந்தர்ராஜை சுஜின்குமார் வெட்டுக் கத்தியால் சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த சவுந்தர்ராஜை அக்கம்பக்கத்தினர் தூக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி சுஜின் குமாரை கைது செய்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News