ஆந்திர மாநிலத்தில் கொடூரம் - மாணவி பலி !!

Update: 2024-10-21 07:30 GMT

கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருமலை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பத்வேல் ராமாஞ்சநேய நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(19), இவரும் 17 வயது இன்டர்மீடியட் மாணவியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக இருந்த நிலையில் விக்னேஷ் மனைவியுடன் கடப்பா நகரில் வசித்து கொண்டே மாணவியுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.

விக்னேஷ், போன் மூலம் மாணவியை வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். பின்னர் வந்த மாணவியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கீழே தள்ளி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி உள்ளார்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைவாக வந்த போலீசார் மாணவியை மீட்டு பத்வேல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடப்பா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1 மணிக்கு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பு மாணவி கொடுத்த வாக்குமூலத்தின்படி விக்னேஷை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், காதல் மனைவி கர்ப்பிணியாக உள்ள நிலையில், சிறு வயது முதலே காதலித்த மாணவி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால், அவரை திட்டமிட்டு வரவழைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

Tags:    

Similar News