புதுக்கடை அருகே தொழிலாளி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு

புதுக்கடை அருகே தொழிலாளியை தாக்கிய தம்பி உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 10:26 GMT

காவல் நிலையம்

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதி மாதியான்விளையை சேர்ந்தவர் அனிஸ்லால்.இவர் வெல்டராக வேலை பார்க்கிறார்.இவரது உடன் பிறந்த சகோதரர் அகிலேஷ் லால் என்பவர் தினமும் மது குடித்து விட்டு வந்து அண்ணன் அனீஸ்லாலிடம் தனக்கு வீடு கட்ட பணம் தர வேண்டும் என கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று அகிலேஷ் லால் தூண்டுதலின்பேரில் அதே பகுதி பொற்றவிளையை சேர்ந்த முரளி, கீழமுற்றம்பகுதி சஜின் மேலும் கண்டால் தெரியும் நபர் ஆகியோர் அனிஸ்லால் வீடு புகுந்து அவரை கம்பியால் உள்ளனர்.

தாக்கி இதில் காயமடைந்த அனிஸ்லாஸ் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ் பத்திரியில் அனும் திக்கப்பட்டு அங்கு சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடைபோலீசார்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News