பைக்-கார் மோதல் : காதலர்கள் உயிரிழப்பு.
செம்பரம்பாக்கம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-01-04 08:09 GMT
உயிரிழப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 26. இவர், பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் நண்பர்களுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காதலி அபிநயா சவுந்தர்யா, 25 என்பவருடன், 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், புத்தாண்டு கொண்டாட பூந்தமல்லி -- பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். செம்பரம்பாக்கம் அருகே, பின்னால் வேகமாக வந்த 'டொயோட்டா' கார் மோதி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், சாலையோர தடுப்பு சுவரில் மோதி அபிநயா சவுந்தர்யா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரகாஷ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய ராணிப்பேட்டையைச் சேர்ந்த முகமது அர்ஷத், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.