பண மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது
Update: 2023-12-18 01:56 GMT
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஜாம்பவனோடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் பாஜக மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார் .இந்த நிலையில் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரிடம் அரசு வேலை பெற்று தருவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று இதுவரை தர மறுத்ததால் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.