ஊட்டியில் கேரட் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஊட்டியில் உள்ள கேரட் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-29 16:52 GMT

சடலம் மீட்பு 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தீட்டுக்கல், தனியார் கேரட் தோட்டத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பேலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து ஊட்டி மேற்கு துணை காவல் ஆய்வாளர் பிரகாஷ், த.மு.மு.க., மாநில விளையாட்டு அணி பொருளாளர் சாதிக் பாட்ஷா,

ஆம்புலன்ஸ் சேவை ‌அமீன் மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் நிர்வாகி தஸ்தகீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரதி பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமமைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம். உடலில் காயங்கள் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு முழு விவரம் தெரிய வரும்," என்றனர். ....

Tags:    

Similar News