டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

மயிலாடுதுறையில் டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள்  ரூ. 40 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை

Update: 2023-12-04 16:13 GMT

மயிலாடுதுறையில் டீக்கடை பூட்டை உடைத்து பொருட்கள்  ரூ. 40 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
, மயிலாடுதுறை பூக்கடை பகுதியில், கும்பகோணம் செல்லும் சாலை மாமரத்து மேடை பகுதியில் , பாரதிமோகன் என்பவர், டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.  இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார்.   காலை வந்து கடையை திறந்த போது , பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  மயிலாடுதுறை போலீசாருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் ஆய்வாளர் செல்வம் , சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ,கடையில் இருந்த மிக்ஸி , அடுப்பு , டீ பாய்லர் உள்ளிட்ட பொருட்களும் , 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும், மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
Tags:    

Similar News