திருவிடைமருதூர் அருகே தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திருவிடைமருதூர் அருகே பகுதி நேர வேலைக்காக சென்ற கல்லூரி மாணவர் தனியார் பேருந்து மோதி சாலையோரம் போடப்பட்டிருந்த குழாயில் சிக்கி உயிரிழப்பு

Update: 2024-02-29 10:57 GMT
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (19). இவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டின் சிரமமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் அணைக்கரை அருகே உள்ள தனியார் பள்ளியின் விளம்பர பேப்பர்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை செய்து வந்தார். நேற்று மாலை கும்பகோணத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பகுதி நேர வேலையை செய்வதற்காக விளம்பர பேப்பர்களை எடுத்துக்கொண்டு திருபுவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. புளியம்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது எதிரில் வந்த முதியவர் மீது மோதி விடாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் இடதுபுறம் திருப்பியதால் ஸ்கூட்டியில் வந்த கார்த்திகேயன் கீழே விழுந்து சாலையோரம் போடப்பட்டிருந்த குழாய்க்குள் சிக்கி பலத்த இரத்த காயத்துடன் உயிரிழந்தார். அவர் பகுதி நேர வேலை செய்ய கொண்டு வந்திருந்த தனியார் பள்ளி விளம்பர பேப்பர்கள் சாலையில் சிதறி கிடந்தது காண்போரை கண் கலங்கச் செய்தது. தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News