குடியாத்ததில் அக்காள், தங்கைக்கு அரிவாள் வெட்டு

குடியாத்ததில் அக்காள், தங்கை அரிவாளல் வெட்டபட்ட சம்பவம் பரபரப்பைஏற்பட்டது.

Update: 2024-04-22 16:20 GMT

காவல் நிலையம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தனகொண்டபல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், விவசாயி. இவரது மகன் அரிகிருஷ்ணன் (34). செங்கல் அறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் அதேப்பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (25) என்பவரை காதலித்து 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் அரிகிருஷ்ணன் குடித்துவிட்டு மனைவி மகாலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மகாலட்சுமி இரண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.அங்கு சென்ற அரிகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதற்கு குழந்தைகள் மறுத்துள்ளனர். உடனே அரிகிருஷ்ணன், குழந்தைகளை அடிக்க முயன்றுள்ளார். இதனை மகாலட்சுமி தடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அரிகிருஷ்ணன் தனது மனைவி மகாலட்சுமியை கத்தியால் வெட்டி உள்ளார். அவரது தந்தை நாகராஜன், மகாலட்சுமியின் அக்காள் ராதிகாவை (34) வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அக்காள், தங்கை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து அரிகிருஷ்ணனை கைது செய்தனர். அவரது தந்தை நாகராஜனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News