குடிபோதையில் நண்பரின் தாயிடம் சில்மிஷம் - இளைஞர் கைது

Update: 2023-12-19 04:34 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சம்பவ தினத்தன்று அதே தெருவை சேர்ந்த நண்பர் முகம்மது பைசலுடன் சென்றுள்ளார்.இருவரும் சித்தர்காடு பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திவிட்டு ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அந்த நேரத்தில் இருவரும் தகராறு செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

முகம்மது பைசல், பலத்த அடிவாங்கிய ஆத்திரத்தில் தமது வீட்டிற்கு சென்றுள்ளார். கார்த்திக் ஊருக்கு செல்லவில்லை, முகம்மது பைசல் ம்ட்டும் வந்ததைக்கண்ட கார்த்திக்கின் தாயார், என் மகன் எங்கே என்று கேட்டுள்ளார். அவன் போதையில் சுடுகாட்டிற்கு அருகில் கிடக்கிறான் என்று கூறியுள்ளார். வா என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் சுடுகாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கே சென்றதும் கார்த்திக் இல்லை, என்று கூறிய முகம்மதுபைசல் திடீரென அவரை கட்டிப்பிடித்து கிழே தள்ளி பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். கார்த்திக்கின் தாயார் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைக் கண்ட முகம்மது பைசல் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் கற்பழிக்க முயன்ற வழக்கு பதிவுசெய்து முகம்மதுபைசலைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News