மூதாட்டியை தாக்கி பலாத்காரம் - கொத்தனார் கைது

நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-02-29 05:09 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (33) கொத்தனார். இவர் நேற்று  மாலை வடீஸ்வரம் பகுதியில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அங்கு தனியாக இருந்த 68 வயது மூதாட்டி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு தப்பினர்.

இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.  தனியாக இருந்தவரின்  வாயில்  துணியால் அடைத்து இருந்ததால் மூதாட்டியால் . கூச்சல் போட முடியவில்லை.  சிறிது நேரம்ம் கழித்து மூதாட்டியின் சகோதரி வந்த போது, .அவரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.      இது குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்ட மூதாட்டியை  ஆசாரிபள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் படுகாய அடைந்திருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகுமாரை  என்பவரை கைது செய்தனர்.  விசாரணையில் மூதாட்டி திருமணமாகாதவர் எனவும், .சம்பவ தினம்  தனியாக இருப்பதை பார்த்து மது போதையில் நுழைந்து, பணம் நகைகளை திருடு நோக்கத்துடன் உள்ளே சென்றவர் பணம் ஏதும் இல்லாததால் மூதாட்டியை வலு கட்டாயமாக பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார் கைது செய்தனர் .

Tags:    

Similar News