1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

Update: 2024-02-18 06:20 GMT

ஊரல்கள் அழிப்பு 

 கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், (பொறுப்பு) உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் இருவேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கீழ்கொட்டாய் கிழக்கு ஓடை மற்றும் கண்ணூர்கிராமம் அகிய இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 02 பேரலில் 1,000 லிட்டர் மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய ஒரு பேரலில் 200 லிட்டர் என மொத்தம் சுமார் 1,200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News