உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்ததால் வெறிச்செயல் - குழந்தையை அடித்து கொன்ற கள்ளக்காதலன்

மங்கலத்தில் உல்லாசம் அனுபவிக்க இடையூறாக இருந்ததால் பெண்ணின் 4 வயது குழந்தையை அடித்து கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். குழந்தை கீழே விழுந்து காயமடைந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

Update: 2024-05-30 06:17 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (28). இவருடைய மனைவி சுபா (26). இவர்கள் இருவரும் கடந்த நான்காண்டுல கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சிவகங்கை மாவட்டம்-மானாமதுரையைச் சேர்ந்தவர்  திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33). இவர்களுடைய மகன் பழனிவேல்ராஜன்(4). இவர்கள் இருவரும் கடந்த 5  ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

திவ்யா 4 வயது குழந்தையுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில் பார்த்தசாரதிக்கும் , திவ்யாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் -இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிங்கப்பூர் நகர் பகுதியில் கணவன்-மனைவி எனக்கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். பார்த்தசாரதி, திவ்யா இருவருக்கும் உல்லாசமாக இருக்க குழந்தை இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.

பார்த்தசாரதி திவ்யாவின் 4 வயது குழந்தை பழனிவேல்ராஜனை அடிக்கடி அடித்து துன்புறுத்தி உள்ளார். இதே போல கடந்த 26 ஆம் தேதி  பார்த்தசாரதி குழந்தையை தாக்கியுள்ளார்‌. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 4 வயது குழந்தை வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சக்காக சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4வயது குழந்தை பழனிவேல்ராஜன் நேற்று முன்தினம்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

4 வயது குழந்தை பழனிவேல் ராஜனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இது பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர்  இது குறித்து தகவல் அறிந்து மங்கலம் போலீசார் நேற்று  தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது பார்த்தசாரதி குழந்தையை அடித்ததால் தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் 4 வயது குழந்தை பழனிவேல் ராஜனின் பிரேத பரிசோதனை கோவை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. பின்னர் திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த மங்களம் போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர்.

Tags:    

Similar News