மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் தந்தை புகார்

மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் தந்தை புகார்

Update: 2023-12-31 13:40 GMT

மகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் தந்தை புகார்

விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன் இவரது மகள் முத்துலட்சுமி என்ற பூஜா வயது 19. இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று மதியம் முத்துலட்சுமி என்ற பூஜா தனது தம்பியுடன் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திற்கு கடைக்கு வந்ததாக கூறப்படுகிறது. கடைக்கு வந்த அவர் மணி என்ற நபருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்று விட்டதாகவும், இது குறித்து முத்துலட்சுமியின் சகோதரர் விக்னேஷ் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த மணிகண்டன் பல பகுதிகளில் தனது மகனை தேடியும் மகள் கிடைக்காத இடத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்கு காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News