பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 அறைகள் தரைமட்டம்

விருதுநகர் அருகே ஓ.கோவில் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெட்டி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-02-19 03:44 GMT

விருதுநகர் அருகே ஒ. கோவில்பட்டி பகுதியில் சங்கரேஸ்வரி என்பவருக்கு சொந்தமான சங்கர் கணேஷ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகள் கொண்டு இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிலையில்,நேற்று  ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்டாசு ஆலை விடுமுறை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பட்டாசு ஆலையை சுற்றி புற்களை அகற்றும் பணியில் ஒருவர் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் வெளியே சென்று பின்பு மணி மருந்து இருந்த அறையில் எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் மணி மருந்து இருந்த அறை மற்றும் அதை சுற்றி இருந்த இரண்டு அறைகள் என 3 அறைகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்தன .வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தோர் தீயணைப்பு துறைக்கும் ஆமத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இடிப்பாடுகளை அகற்ற முயற்சி செய்த பொழுது வெடி மருந்து இருந்த அறை என்பதால் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடவில்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இந்த வெடி விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

Tags:    

Similar News