இன்ஜினியரிங் கல்லூரிக்குச் சென்ற மாணவி மாயம்: பெற்றோர் புகார்
ஆறுகாணி அருகே இன்ஜினியரிங் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-13 13:46 GMT
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே மருதம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெனி.இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவத்தன்று கல்லூக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெனி வீடு திரும்பவில்லை. இதை யடுத்து அவரது பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க ளில் தேடினார்கள்.
எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மாயமான இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஜெனியை தேடி வருகின்றனர்.