காதலனை கழுத்தை நெரித்து கொன்ற காதலி கைது

விருதுநகரில் தனியார் லாட்ஜில் காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-06-17 07:07 GMT

விருதுநகர் பாண்டியன் நகர் தர்மலிங்கம் செல்வராணியின் மகன் (27) வயதான காசி விஸ்வநாதன். கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூரில் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது விருதுநகர் வந்து தாய் தந்தையரை பார்ப்பதும் நண்பர்கள் வீட்டில் தங்கிச் செல்வதும் வழக்கம். இவர் திருப்பூரில் திருமணமாகி விவாகரத்தான நந்தினி என்ற( 22) வயதுடைய பெண்ணுடன் காதலித்து பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 13-ம் தேதி காசி விஸ்வநாதன் அவரது வீட்டிற்கு வந்து தான் நந்தனியுடன் விருதுநகர் தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருப்பதாக தாயார் செல்வராணியிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்பு மறுநாள் 14-ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் தனது மகன் காசி விஸ்வநாதன் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் தரையில் இறந்து கிடப்பதாக விருதுநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விருதுநகர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கரூர் மாவட்டம் பாலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த நந்தினிக்கும் காசி விஸ்வநாதனுக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் பேண்டேஜ் துணியை வைத்து காசி விஸ்வநாதன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதன் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு அவரை கொலை செய்த நந்தினியை இன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். விருதுநகரில் காதலனை காதலியே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News