வழிப்பறி குற்றத்தில் தொடர்புடைய ரவுடி மருத்துவமனையில் அனுமதி

வழிப்பறி குற்றத்தில் தொடர்புடைய ரவுடி மருத்துவமனையில் அனுமதி

Update: 2023-12-25 16:48 GMT

வழிப்பறி குற்றத்தில் தொடர்புடைய ரவுடி மருத்துவமனையில் அனுமதி

சுஜிலி என்கிற சாம்ராஜ் அவரது நெருங்கிய நண்பர் அஜித்குமார் இருவரும் திருத்துறைப்பூண்டி விதுலா எண்டர்பிரைஸ் உரக்கடையினுள் ல் சென்று உரக்கடையின் உரிமையாளர் சரவணபவன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 65 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூபாய் 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் பறித்து சென்றுள்ளனர். சரவணபவன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சுஜிலி மற்றும் அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் தேடிச்சென்ற போது சிங்கலாந்தி பாலம் அருகில் நின்று கொண்டிருந்த சுஜிலி என்கிற சாம்ராஜ் தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து குதித்ததில் அவர் இடது கால் மூட்டுக்கு கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் .தலைமுறைவாக இருந்த அஜித்குமார் தொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Tags:    

Similar News