சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 31 பாட்டில்கள் பறிமுதல்

Update: 2024-01-02 17:05 GMT

இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 31 பாட்டில்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல் நிலைய போலீசார் சுற்றுவட்டார சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் தாயமங்கலத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் சட்ட விரோதமாக மது விற்றது தெரியவந்தது. போலீசார் அவரிடமிருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர்
Tags:    

Similar News