மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.
மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.;
By : King 24x7 Website
Update: 2024-01-09 07:48 GMT
மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய ரோஷன் குமார் சென்னை திருமங்கலம் பிவி நகர் பகுதியில் தங்கி கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு ரோஷன் பிவி நகர் நேரு தெருவில் கட்டுமான நடைபெற்று வரும் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் 2 வது மாடிக்கு சென்ற ரோஷன் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்து திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஷன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்வம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.