முதியவர் விஷம் குடித்து தற்கொலை

திருவட்டாறு அருகே மது போதையில் விஷம் குடித்த முதியவர் உயிரிழப்பு.

Update: 2024-03-28 05:18 GMT

தற்கொலை

கன்னியாகுமரி திருவட்டார் அருகே முளகுமூடு பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் டேவிட்சன். தொழிலாளி. இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியின் மகள் ஜோன் செல்வ ரோசி என்பவருக்கு திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு டேவிட் சன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, கதவை உள்புறமாக தாளிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் நீண்டநேரம் டேவிட்சன் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜோன் செல்வ ரோசி சென்று பார்த்தார். கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டேவிட்சன் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோ தித்து பார்க்கையில், டேவிட்சன் விஷம் குடித்து இறந் துவிட்டதாக கூறினார். இதுகுறித்து ஜோன் செல்வ. ரோசி அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News