சேலம் அன்னதானப்பட்டியில் முதியவர் மாயம்
சேலம் அன்னதானப்பட்டியில் முதியவர் மாயம்
By : King 24x7 Website
Update: 2023-12-31 02:24 GMT
சேலம் மணியனூர் பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவா (77) .இவர் சிறிது கண்பார்வை குறைபாடு உடையவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருகில் உள்ள மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர். மீண்டும் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது மகன் செந்தில்குமார் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான முதியவரை தேடி வருகின்றனர்.