போலீஸ்காரர் கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள், 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

மயிலாடுதுறை அருகே தலைமை காவலரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மயிலாடுதுறை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்

Update: 2024-04-26 03:50 GMT

தலைமைக் காவலர் ரவிச்சந்திரன்

மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்ற போது வழி மறித்த நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த போலீசார் குழுவினர் மீது காரை விட்டு மோதியபோது இருசக்கர வாகனத்தில் வழிமறித்த தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் மார்பு எலும்புகள் உடைந்து படுகாயம் அடைந்து சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஆனைக்காரன் சத்திரம் போலீசார் மீன்சுருட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன், சங்கர், ராமமூர்த்தி திருவிடைமருதூர் புளியம்பட்டியைச் சேர்ந்த கருணாகரன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கலைச்செல்வனையும் கருணாகரணையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள் மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜரான செல்வம் செல்வகுமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி நிறுத்திய 21 சாட்சிகள் பிறழ் சாட்சிகள் இன்றி சாட்சி அளித்தனர். தலைமைக் காவலரை காரையேற்றி கொலை செய்திருப்பதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்ட நிலையில் குற்றவாளிகள் என்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கி தண்டனையை ஒத்திவைத்தார்.

நேற்று  நீதிபதி விஜயகுமாரி அளித்த தீர்ப்பில் முதல் நான்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் மூன்று மாத சிறை தண்டனை விதித்தார். (பிரிவு 353க்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை பிரிவு 201 க்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, பிரிவு 205க்கு மூணு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பிரிவு 4(1)a தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும், ) ஆள் மாறாட்டம் செய்த செல்வம் மற்றும் செல்வக்குமார் ஆகிய இருவருக்கும் 201க்கு 7வருடம் 2ஆயிரம் அபராதம் விதித்து (சட்டப்பிரிவு 205, 3ஆண்டுகளும் 353 பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகளும் தண்டனை)  தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News