ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்தப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்

Update: 2023-12-13 08:39 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து கடத்தல் காரர்கள் போதை பொருட்களை படகுமூலம் கடத்திச் செல்வதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ரோந்து கப்பலில் மண்டபம் தென்கடல் பகுதிக்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை பிடிக்க முயன்றனர்.

ஆனால் கடலோர காவல் படையினரை கண்டதும் அந்த படகில் இருந்தவர்கள் படகை திருப்பி வேதாளை கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து படகில் இருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த படகையும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளையும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்  அந்த படகு யாருக்கு சொந்தமானது தப்பியோடிய கடத்தல் காரர்கள் யார் என்பது குறித்தும் கடலோர காவல் படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News