போலி நகையை அடமானம் வைத்து ரூ.7.5 கோடி மோசடி

சிவகாசியில் பொதுத்துறை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி செய்த நகை கடை உரிமையாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-03-01 08:18 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் 15,427 கிராம் போலி நகைகளை அடகு வைத்து, ரூ.7.5 கோடி மோசடி செய்த நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம், வங்கி நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் திருநெல்வேலி மண்டல மேலாளர் ரஞ்சித்(45). இவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி உட்பட 6 மாவட்டங்களில் 46 கிளைகள் இயங்கி வருகிறது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி சிவகாசி கிளையில் சிவகாசியில் நகை கடை நடத்தி வரும், தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நகைகடன் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார்.

சிவகாசி கிளையில் தணிக்கை செய்த போது, 56 பேரின் 126 நகை கடன் கணக்குகளில் உள்ள 15,427 கிராம் தங்க நகைகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போது, வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ள முத்துமணி என்பவரது உதவியுடன் பாலசுந்தரம் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7,55,56,509 ஐ மோசடி செய்தது செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரில் நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோரை சிவகாசி நகர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News