குட்கா, நிக்கோடின் பொருட்கள் விற்பனை - 6 கடைகளுக்கு சீல்

குட்கா, நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வைத்தனார்

Update: 2023-12-06 08:21 GMT

குட்கா, நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வைத்தனர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் மற்றும் பொன்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 மளிகை கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தேவூர் அருகே பொன்னம்பாளையம் பகுதியில் மளிகை கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்று சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் தேவூர் பகுதியில் மளிகை கடையில் சோதனை நடத்தினர். இதில் பொன்னம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவரது மளிகை கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா மற்றுகுட்கா மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருட்கள் விற்பனைம் நிக்கோடின் கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்வதை கண்டு பிடித்தனர் இதனையடுத்து அந்த மளிகை கடைக்கு சீல் வைத்தனர்
Tags:    

Similar News