புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-02 08:56 GMT

காவல் நிலையம்

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட ஏராளம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு படிக்கும் மாண வர்களை குறிவைத்து கஞ்சா. உள்ளிட்ட போதை பெருட்கள் விற்பதாக ஏற்கனவே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் நேற்று புதுக் கடை போலீஸ் எஸ்ஐ நெல்சன் தலைமையில் கூட்டாலுமூடுபகுதியில் சோதனை நடத்தப் பட்டது. அப்போது பள்ளி அருகே கஞ்சாவுடன் சுற்றிய அதே பகுதியை சேர்ந்த விஜின் (37) என்பவரை போலீசார் - பிடித்து விசாரித்தனர்.

அவரி டம் விதையுடன் கூடிய கஞ்சா 70 கிராம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரது செல்போனையும் பறி முதல் செய்து, கைது செய்தனர்.

மேலும் காப்புக்காடுசந்திப்பில் நடந்த சோதனை யில் விஸ்வம்பரன் (47) என்பவர் கடையில் விற்பனைக்காக வைத் திருந்த தடை செய்யப்பட்ட, 15 கிராம் எடை கொண்ட தொள்ளாயிரம் புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய் யப்பட்டன.

அவற்றின் மதிப்பு 9 ஆயிரம் ரூபாய் என தெரிய வந் துள்ளது. இது தொடர்பாகவும் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News