குளத்தில் சிக்கிய கடத்தல் லாரி - 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-01-23 02:48 GMT
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 
ஆலங்குளம் - நெட்டூா் சாலையில் உள்ள குமிழன் குளக்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி ஒன்றி சிக்கி வெளியேற முடியாமல் இருந்தது. இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அங்கு சென்று லாரியை சோதனையிட்டதில் கேரளத்திற்குக் கடத்திச் செல்வதற்கு 10 டன் ரேஷன் அரிசியை மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாம். அரிசியைக் கைப்பற்றிய போலீஸாா், அதைக் கடத்த முயன்றதாக ஆலங்குளம் நல்லூரைச் சோ்ந்த சுதாகா் (40) என்பவரை கைது செய்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
Tags:    

Similar News