மாற்றுத்திறனாளி திடீர் மரணம்
மாற்றுத்திறனாளி திடீர் மரணம்;
By : King 24x7 Website
Update: 2023-12-21 08:06 GMT
முத்துப்பேட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர் உடல் நசுங்கி பலி
சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டி காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் (48). மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து செய்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயராமன், நேற்று தனது மனைவி, பிள்ளைகளுடன் திண்டுக்கல்லுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயராமனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.