கூலிப்படையை ஏவி மகளை கொலை செய்ய திட்டம் தீட்டிய தாய் ; பெரிய ட்விஸ்ட் திட்டம் தீட்டிய தாய் கொலை !!

Update: 2024-10-14 10:00 GMT

கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது 17 வயது மகளைக் கொலைசெய்யக் கூலிப்படையைச் சேர்ந்தவரை நியமித்துள்ளார் 42 வயதான தாய் அல்கா. ஆனால், கூலிப்படையைச் சேர்ந்தவரே மகளின் காதலனாக பின்பு மாறி, காதலியுடன் சேர்ந்து தாயையே கொலைசெய்துள்ள `பகீர்' சம்பவம், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அக்டோபர் 6-ம் தேதி எட்டா மாவட்டத்தில் ஜஷ்ரத்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டது. இந்த நிலையில்தான் அல்காவின் கணவர் ராமகந்த், தன் மனைவியைக் காணவில்லை எனப் புகார் அளித்திருக்கிறார். போலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைக்குப் பின்னர், கண்டறியப்பட்ட சடலம், அல்காவினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் கொலையான பெண்ணுக்கும் அவருடைய மகளுக்கும் இடையே தீவிரமான சில பிரச்னைகள் இருந்திருக்கின்றன. அதன் காரணமாக இருவரிடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் மகள் மீதான ஆத்திரத்தில், அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறார் தாய் அல்கா. அதற்காக பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்குச் சென்றுவந்த கூலிப்படையைச் சேர்ந்த 38 வயதான சுபாஷ் என்பவருக்கு ரூ.50,000 கொடுத்து, தன்னுடைய மகளைக் கொலைசெய்யுமாறு கூறியிருக்கிறார். ஆனால் இதில் பெரிய ட்விஸ்ட் அல்காவின் 17 வயது மகள் காதலித்ததே சுபாஷைத்தான்.

அதனால், அல்காவின் திட்டத்தை சுபாஷ் அவருடைய மகளுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்த, அல்காவின் மகள் சாமர்த்தியமாகச் சிந்தித்து சுபாஷிடம் `நாம் திருமணம் செய்து கொள்ளலாம். அதே சமயம், என்னுடைய தாய் அல்காவை கொலை செய்துவிடலாம்' எனக் கூறியிருக்கிறார். அல்கா மகளின் திட்டத்தை ஏற்றுக்கொண்ட சுபாஷ், மகளைக் கொன்றுவிட்டதுபோல புகைப்படங்களை அல்காவிற்கு அனுப்பி உள்ளார். பேசியபடி 50,000 ரூபாயை ஆக்ராவிற்கு வந்து தருமாறு அழைத்திருக்கிறார். பணத்துடன் சென்ற அல்காவிடம், சுபாஷ், `உங்கள் மகளைக் கொல்லவில்லை' என உண்மையைக் கூறியிருக்கிறார். பின்பு மூவரும் ரயிலில் பயணம் செய்துள்ளனர். எட்டா பகுதியை நெருங்கும்போது, அல்காவை இருவரும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு திணை வயலில் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். நாங்கள் நடத்திய விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்." என்றனர். இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News